Friday, June 9, 2017

தாலாட்டும் சங்கீதம்

யாரின் குரல் இது...
யார் பாடும் தாலாட்டு இது...

அம்மா வின் குரலெனில் தூங்கியிருப்பேன்....

மனைவியின் குரலெனில் தூங்காமல் விழித்திருப்பேன்....

மகளின் குரலெனில் தூங்க வைத்திருப்பேன்....

கொசுவின் குரலானதால்...
தூங்கவும் முடியாமல்...
விழிக்கவும் முடியாமல்...

என் கைகள் இரண்டையும் எமனின் பாசக்கயிராக்கி...
அந்தக் எமகாதக கொசுவை தேடிக்கொண்டிருக்கிறேன்.....

No comments:

Post a Comment