Tuesday, March 26, 2013

விலைமாது...



விலைமாது...

காதலைக் கேட்டேன்...
காமத்தைத் தந்தாள்...

கருவறையைக் கேட்டேன்...
கழிப்பறையைத் தந்தாள்...

உள்ளம் கேட்டேன்...
உதட்டைத் தந்தாள்...

நாணம் யாதெனைக் கேட்டேன்...
என்னை நாணிடைச்  செய்தாள்...

வாழ்விற்கு விலையேது என்று கேட்டேன் - இவ்வுலகில்
எல்லாவற்றிற்கும் ஒரு விலையுண்டு என்றாள்...

பதில்கள் எல்லாம் சரி...
கேள்விகள் தான் தவறு என்றார்கள்
அவளை இந்நிலைக்கிட்டவர்கள்...

விலைமாது - அவள் இழந்தவற்றிர்க்கு
விலையேது...