Tuesday, April 2, 2013

கனவில் வாழ்கிறேன் நான்...

கனவில் வாழ்கிறேன் நான்...

கண்மூடிக் கிடக்கிறேன் நான்...
கனவில் வாழ்கிறேன் நான்...

கண் திறந்தால்...
நிஜம் காண பயம் தான் 
நிம்மதியற்ற வாழ்க்கை தான்...

கனவில் சாதனைகள் ஈடேறும்...
நிஜத்தில் வேதனைகள் பின்தொடரும்...

கனவில் வாழ்க்கை காதலியுடன்...
நிஜத்தில் அதுவே தனிமையுடன்...

நிஜம் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால்...
கனவிலேயே களித்திருப்பேன் - நான் 
கருவிலேயே வாழ்ந்து முடித்திருப்பேன்...