Wednesday, August 23, 2017

நீ உடனிருக்கும் வரை...

அன்பு தந்தேன்... அதை
காதலாக்கினாய்...

தண்ணீர் தந்தேன்... அதை
தேனாக்கினாய்...

தாலி கட்டினேன்... எனக்கு
வாழ்வு தந்தாய்...

விதை கொடுத்தேன்... அதை
விழுதாக்கினாய்...

வீடு வாங்கினேன்... அதை
இல்லமாக்கினாய்...

கவலை கொண்டேன்... அதை
களிப்பாக்கினாய்....

சுருண்டு விழுந்தேன்... சுகம் தந்து
எழுப்பினாய்...

தோல்வி அடைந்தேன்... ஆறுதல் சொல்லி தேற்றினாய்....

தலைவலி என்றேன்... தடவிக்
கொடுத்தாய்...

வாழ்வை தேடிக் கொண்டிருந்தேன்...
கையில் கொடுத்தாய்....

நம் வாழ்வில் அடுத்ததாக என்ன வருமென நானறியேன்...
எதுவாயினும் நான் தேடும் தோள்
உனதென்பதை அறிவேன்...

நான் பயணிக்கும்
பாலைவனமும் சோலையாகும்....
நீ உடனிருக்கும் வரை...