Friday, October 26, 2012

கனவு...


கனவு...


தூக்கத்தில் வருவதல்ல கனவு
தூங்கவிடாது துரத்துவதே கனவு

காண்பதெல்லாம் ஆகிவிடாது கனவு
கண்டுவிடத் துடிக்க வைப்பதாம் கனவு

பிறர் பாராட்ட சொல்வதல்ல கனவு
தன்னைத் தட்டி எழுப்புவுதே கனவு

ஒரு நாளில் எளிதில் மெய்ப்படுவதல்ல கனவு
ஒரு நாள் மெய்ப்படும் என்று நம்பிக்கையூற்றி
ஒவ்வொரு நாளும் உழைக்கத் தூண்டுவதே கனவு

இப்படி ஒரு கனவு மெய்ப்பட முனைந்து விட்டால்
பின் தூக்கமேது... வாழ்வில் துக்கமேது...

                                                        - பாலா(ஜி)