Friday, June 9, 2017

தாலாட்டும் சங்கீதம்

யாரின் குரல் இது...
யார் பாடும் தாலாட்டு இது...

அம்மா வின் குரலெனில் தூங்கியிருப்பேன்....

மனைவியின் குரலெனில் தூங்காமல் விழித்திருப்பேன்....

மகளின் குரலெனில் தூங்க வைத்திருப்பேன்....

கொசுவின் குரலானதால்...
தூங்கவும் முடியாமல்...
விழிக்கவும் முடியாமல்...

என் கைகள் இரண்டையும் எமனின் பாசக்கயிராக்கி...
அந்தக் எமகாதக கொசுவை தேடிக்கொண்டிருக்கிறேன்.....

(என்) வீடு

என் படுக்கையறையில்
கொசுவுக்கு என்ன வேலை 
என்று கேட்ட மனிதனைப் பார்த்து

பூமி சொன்னது

எனது ஏரியின் களிமண் செங்கல்லாகி உன் வீட்டு சுவரானது...
என் ஆற்றின் மணற்படுகைகள்
அச்சுவரின் பூச்சாகின...
என் நிலத்தில் கிடைத்த கனிமங்கள் உலோகங்களாகி உன் வீட்டின் கம்பிகளாயின....
என் காட்டில் வெட்டிய மரங்கள்
கதவுகளாயின....

இப்படி​ என் வளங்களிலிருந்து கட்டப்பட்ட அந்த வீட்டை நீயும் கொசுவும் மட்டுமே அனுபவிப்பது ஒரு வித வஞ்சனையே....

என்னுள் வாழும் மற்ற உயிரினங்கள் அங்கே புகும் நாள் வெகு தொலைவிலில்லை....