Monday, February 27, 2017

கண்டுபிடித்தாள்...

கண்டுபிடித்தாள்...


நான் உண்மை உரைக்கவில்லை என்பதை கண்டுபிடித்தாள்...
நான் பொய் சொல்கிறேன் என்பதையும் கண்டுபிடித்தாள்...

நான் துடிக்கிறேன் என்பதை கண்டுபிடித்தாள்...
நான் நடிக்கிறேன் என்பதையும் கண்டுபிடித்தாள்...

ஏனோ... 
என் காதலையும் அதற்க்காக நான் சிந்திய கண்ணீரையும் மட்டும் 
அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை...

எதிர்ப்பவன் நான்....


(எதை) எதிர்ப்பவன் நான்....

நான் தெய்வத்தை எதிர்ப்பவன் அல்ல...
தெய்வத்தையும் (சாத்தானையும்) கல்லுக்குள் வைப்பதை எதிர்ப்பவன்...

நான் கல்லை எதிர்ப்பவன் அல்ல...
அக்கல்லை கோவிலுக்குள் அடைப்பதை எதிர்ப்பவன்...

நான் கோவிலை எதிர்ப்பவன் அல்ல...
கோவிலில் வழக்கத்திலுள்ள ஜாதியத்தை  எதிர்ப்பவன்...

நான் ஜாதியத்தை எதிர்ப்பவன் அல்ல...
ஜாதியின் பெயரால் செய்யப்படும் அடக்குமுறையை எதிர்ப்பவன்...

நான் அடக்குமுறையை எதிர்ப்பவன் அல்ல...
நலிந்தோரை அவ்வண்ணமே வைத்திருக்கும் சதியை எதிர்ப்பவன்...

நான் சதியை எதிர்ப்பவன் அல்ல...
அந்தச் சதியால் சமுதாயத்தின் ஒரு பகுதி தாழ்த்தப்படுவதை எதிர்ப்பவன்...

நான் தாழ்த்தப்படுவதை எதிர்ப்பவன் அல்ல...
தாழ்த்தப்படுதல் பிறப்பால் முடிவு செய்யப்படுவதை எதிர்ப்பவன்...

இதோடு சேர்த்து....
'எதிர்ப்பதனால் எதிரி' என்ற எண்ணத்தையும் எதிர்ப்பவன் நான்...