Saturday, December 8, 2012

அழுகை ஓர் அழகு...

அழுகை ஓர் அழகு...

அவள்
தேம்பி தேம்பி அழுவதும்
ஒரு தெவிட்டாத அழகு தான்

மூச்சிரைத்து அழுவதும்
முகம் புதைத்து அழுவதும்
முத்தான அழகுதான்

கண்ணீர் கரை புரண்டோட அழுவதும்
கண் வற்றும் வரை அழுவதும்
காணக் கிடைக்காத அழகுதான்

இந்த எட்டு வயது பெதும்பைக்குத் (பெண்ணுக்குத்) தான்
எத்தனை அழுகை தெரியுதடா...
நான் வங்கித் தந்த எதுவும் அந்த அழுகையை நிறுத்த உதவலயடா...

                               - பாலா(ஜி)