Monday, August 12, 2013

விற்பனை...

விற்பனை...

விலை மகள் கேட்டாள்...
நான் விற்பதை விமர்சிப்பவரே...
மற்றவர் விற்பதென்ன தெரியுமா?

வழக்குறைஞர் சட்டத்தை விற்கிறார்...
மருத்துவர் உடல் நலத்தை விற்கிறார்...

விவசாயி நிலவளத்தை விற்கிறார்...
ஆசிரியர் / கல்வியாளர் கல்வியை விற்கிறார்...

அரசியல்வாதி கொள்கையை விற்கிறார்...
வாக்காளர் வாக்கினை(ஓட்டை) விற்கிறார்...

மதகுருமார் மதத்தை விற்கிறார்...
சாதித் தலைவர் சாதியை விற்கிறார்...

அரசு அதிகாரி நேர்மையை விற்கிறார்...
வியாபாரி கிடைத்தையெல்லம் விற்கிறார்...


கூலி தொழில் செய்பவர் உடல் உழைப்பை விற்கிறார்...
நேர்மையாய் பணி புரிபவர் நேரத்தை விற்கிறார்...


எதையும் விற்காமல் யாரும் வாழ்வதில்லை...
என்ன விற்கிறோம் என்பதில் எனக்கு அக்கறையில்லை...

அஞ்சல் நீ...



ஓ அஞ்சலி...!!!
நான் எழுதத் துடிக்கும் அஞ்சல் நீ...

என்னை ஏங்க வைக்கும் ஏஞ்சல் நீ...
என் மனத்தை ஆட்டிடும் ஊஞ்சல் நீ...

தீராத கொஞ்சல் நீ...
தெவிட்டாத சர்க்கரைப் பொங்கல் நீ...

தீர்க்க முடியாத சிக்கல் நீ...
நினைக்காமலே வரும் விக்கல் நீ...

என்றும் வாழ்வாய் என் நெஞ்சில் நீ...