Tuesday, August 14, 2012

கனவு ஒன்று கண்டேனம்மா...


கனவு ஒன்று கண்டேனம்மா...

கனவு ஒன்று கண்டேனம்மா
பாரத மாதா கனவு ஒன்று கண்டேனம்மா

உன் பிள்ளைகள்
மதுவை விட மதியை நாடும் நாள் வருமென...
தன செல்வத்தை விட இந்த நாட்டின் செல்வத்தை மதித்திடும் நாள் வருமென...
கோயில்கள் கட்ட தரும் நன்கொடைய விட கல்விக் கூடங்கள் கட்ட அதிக நன்கொடைகள் தருவது போல்...
கனவு ஒன்று கண்டேனம்மா....


Sunday, August 12, 2012

தேசிய தின நல வாழ்த்துக்கள்...

மராத்தியர்களின் வீரம்
குஜராத்தியர்களின் வணிக திறன்
பஞ்சாபின் உழைப்பு
ராஜஸ்தானத்தின் நேர்மை
பாடளிபுத்ரத்தின் கனிம வளம்

இமாச்சலத்தின் பனி படர்ந்த மலை
வங்காளத்தின் கலை
கன்னடத்தின் சிலை
தெலுங்கானாவின் இசை
காஷ்மீர் மற்றும் கேரளாவின் அழகு
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்

இது எல்லாம் சேர்ந்தது தான் இந்தியா...

நமக்குள் சண்டைகள் வரலாம்...  ஆனால் அவை நம்ம ஒரு போதும் பிரித்துவிடாது...
மாறாக நாம் ஒருவரை ஒருவர் மேலும் புரிந்து கொள்ள வழி வகுக்கும்...
இந்த எண்ணத்துடனே மீண்டும் சளைக்காமல் சண்டையிடுவோம்...

உணர்வோம்... ஒருங்கிணைவோம்... உழைப்போம் (இந்த நாடு முன்னேற) ...

'பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு'
என்ற சொல்லை மெய்ப்பித்திடுவோம்...
நூறு ஆண்டுகள் கழித்து அல்ல... நமது வாழ்நாளில்

இனிய தேசிய தின (சுதந்திர தின மற்றும் குடியரசு தின)  நல வாழ்த்துக்கள்....

                                                  - பாலா(ஜி)
அவளிடம் சொன்னேன்...

ஆசையைச் சொன்னேன் - அசடு என்றாள்
கனவைச் சொன்னேன் - கானல் என்றாள்
காதலைச் சொன்னேன் - காமம் என்றாள்
உள்ளதைச் சொன்னேன் - உளறல் என்றாள்
என் உள்ளத்தைச் சொன்னேன் - மௌனமானாள்...

                                                      - பாலா(ஜி)