Showing posts with label மரம் போல வாழ.... Show all posts
Showing posts with label மரம் போல வாழ.... Show all posts

Tuesday, January 25, 2022

மரம் போல வாழ...

மரம் போல் வாழ வரம் வேண்டும்... 

பறவை க்கும் விலங்கு க்கும்
உலா போகும் இடமாக 
உணவருந்தும் மேடையாக
துஞ்சும் இடமாக
துயில் தரும் தலையணை யாக... 

மரம் போல வாழ வரம் வேண்டும்... 

மரிக்காமல் மண்ணுடன் மகிழ்ந்துறவாட
அம்மண் நீர்த்துப் போகாமல்
அணைத்துக் கொள்ள
மண் புழுவுடன் போட்டி போட்டு உழவுக்கு உதவ... 

மரம் போல வாழ வரம் வேண்டும்...

வருடம் ஒரு முறையாவது, இலைகளைத் துறந்து
உயிரற்ற உறைந்த ஓவியமாக சில மாதங்கள் வாழ்ந்து
பின் புதிய இலைகளை பெற்றெடுக்க...

மரம் போல வாழ வரம் வேண்டும்...