பனிப்பொழிவு...
இயற்கை தீட்டிடும் சுண்ணாம்பு...
மனிதன் இட்ட பெயர் பனிப்பொழிவு...
வெள்ளைப் புயல் - உருவாக்கியதொரு
வெண்மைக் கடல்
காணும் இடமெல்லாம் வெள்ளி மணல் - அதில்
காணாமல் போனது கனல்
வருடா வருடம் மறக்காமல்...
வருடந்தோறும் தவறாமல்...
மனிதன் மனதில் இல்லா வெண்மைதனை...
அவனுக்கு நினைவூட்டிட பொழியுது வானமடா...
லட்சம் வருடத்திற்கு ஒருமுறை...
பொழியும் இடம்தனை மாற்றித்தான்...
புது துருவம், பருவம் தீட்டிடுதே...
இயற்கை தன் கைவண்ணம் காட்டிடுதே...
- பாலா(ஜி)