Showing posts with label அன்னையின் பதில்.... Show all posts
Showing posts with label அன்னையின் பதில்.... Show all posts

Friday, May 24, 2013

அன்னையின் பதில்...

அன்னையின் பதில்...

அங்கிருப்பவற்றைச் சொன்னவனே...
இங்கிருப்பதைக் கூறுகிறேன் - நினைவுகூர்...

உன்னைக் காணாது
உணவை விட மருந்தை அதிகம் உண்ணும்
தாயுண்டு... தந்தையுண்டு...

கண்ணால் skype ல் கண்டபின்...
உச்சி முகரத் துடிக்கும் உள்ளமுண்டு...

பிறை விழுந்த கண்ணால் அரைகுறையாய் கண்ட உன்னை
சிகிச்சை முடிந்தபின் முழுமையாய்க் காண ஏங்கும் கண்களுண்டு...

கூன் விழுமுன் தன பெயரனுடன் விளையாடத்
துடிக்கும் மனமுண்டு...

கல்லைப் பொன்னாய் மற்றும் மண்ணுண்டு...
மண்ணை வளம் செய்யும் மடுகுண்டு...

இனியேதும் காரணம் சொல்லாது...
உடனே கிளம்பி வா ஊருக்கு...
மணமுடிக்க மாமன் பொண்ணு காத்திருக்கு...